சின்னத்தம்பிபாளையம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் , சின்னத்தம்பி பாளையம் ஊராட்சியில்அந்தியூர் சத்தி சாலையில் சின்னத்தம்பி பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 7.5 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நல்லசாமி , கிளை செயலாளர் சின்னசாமி, முருகன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபால் ஈரோடு மாவட்டம்
No comments:
Post a Comment