34 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் வயதான மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பை சரி செய்து வழங்க கோரிக்கை !!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 April 2024

34 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் வயதான மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பை சரி செய்து வழங்க கோரிக்கை !!!

 


சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம் பாளையம் பகுதியில் 34 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் வயதான மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பை சரி செய்து வழங்க கோரிக்கை !!!

       ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் வட்டம் ,  தாண்டாம்பாளையம்  கிராமத்தில் விவசாயி தாண்டாக்கவுண்டர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார், அவரது மனைவி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளர், இவரது வீட்டிற்கு மின்இணைப்பு உள்ளது, இணைப்பு எண் 367002308. அந்த மின் இணைப்பானது கடந்த மார்ச் 22 ம் தேதி முதல் மின்பாதையில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, உடனடியாக மின்சார வாரியத்தில் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது, 

       மின்சாரம் இல்லாதது குறித்து தகவல் தெரிவித்து 10 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 03/04/2024 அன்று  சத்தியமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை அடுத்து 'மின் பாதை சரி செய்வதற்கு அரசியல் நெருக்கடி இருப்பதாகவும் காவல்துறை உதவியுடன் அதனை சரி செய்து உடனடியாக மின்சாரம் வழங்குவதாகவும் செயற்பொறியாளர் அவர்கள் உத்தரவாதம் அளித்தார்' ஆனால் 20 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, வயதான தம்பதி உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கடுமையான 110 டிகிரி வெப்பத்திலும் மின்சாரம் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியது, 

  ஆகவே மின்சார வாரியம் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்குவதுடன் தனது பணியில் மெத்தன போக்குடன் செயல்படும் மின்சார வாரிய ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்ந்து மின் இணைப்பு வழங்காத பட்சத்தில் வரும் 30/04/2024  செவ்வாய் கிழமை முதல் சத்தியமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

   தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 .

No comments:

Post a Comment