முக்குடிவேலம்பாளையத்தில் 108 சங்க அபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 April 2024

முக்குடிவேலம்பாளையத்தில் 108 சங்க அபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது

 


ஈரோடு மாவட்டம்,கொடுமுடி வட்டம் பாசூர் கிராமம் முக்குடிவேலம்பாளையத்தில் எழுந்தருளி அருள்பாவிக்கும் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன், குன்னுடையான்,தாமரை நாச்சியார்,பொன்னர்,சங்கர்,அத்தை பிள்ளை அத்தான்,மாயவர், முத்தாயி,தங்காயி,பவளாயி,கன்னிமார் சாமிகள்,மகாமுனி, மந்திரமுனி,சாம்புவன் மற்றும் காவல் தெய்வம் கருப்பண்ணசாமி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா 04.04.2024 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது...

அதனைத் தொடர்ந்து 24 நாட்கள் நடைபெற்ற மண்டல அபிஷேகத்தில் பெரியகாண்டியம்மன் மற்றும் அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது...22 ஆம் நாள்26.04.2024 அன்று திருவிளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது...

24 ஆம் நாள் மண்டல அபிஷேகத்தில் நிறைவு நாள் 28.04.2024 அன்று 108 சங்க அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...

 விழாவில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அருள் பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது...

No comments:

Post a Comment