சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஆறாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபாடி போட்டிக்கு பேரூராட்சி தலைவர் கே.ரவிச்சந்திரன் முதல் பரிசு வழங்கினார்!!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 29 April 2024

சத்தியமங்கலம் அருகே கெம்பநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஆறாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபாடி போட்டிக்கு பேரூராட்சி தலைவர் கே.ரவிச்சந்திரன் முதல் பரிசு வழங்கினார்!!!



ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் நண்பர்கள் மற்றும் ஓம் சக்தி கபாடி குழு நடத்தும் ஆறாம் ஆண்டு மாநிலம் தழுவிய கபாடி தொடர் போட்டிக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கெம்பநாயக்கன்பாளையம் பேரூர்  செயலாளரும், கெம்ப நாயக்கன்பாளையம் பேரூராட்சி  தலைவர் கே. ரவிச்சந்திரன் முதல் பரிசு ரூ 30,000 ரூபாய் வழங்கினார். மற்றும் கெம்பநாயக்கன் பாளையம் பேரூர்  துணைச்செயலாளர் ஆ.ரஜினிதம்பி ரூ.5000/- ம். பேரூராட்சி 9 வார்டு உறுப்பினர் ஜோதி ரமேஷ் ரூ. 3000/-  ம் , பேரூராட்சி 4வது வார்டு உறுப்பினர் முத்தம்மாள் ஈஸ்வரன் ரூ.3000/- ம், பேரூராட்சி 3வது  வார்டு உறுப்பினர் கனிமொழி மாதப்பன் ரூ. 3000/- ம் , 9 வது வார்டு செயலாளர் டிம்பிள் சுப்பிரமணியம் ரூ. 3000/- ம் , தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் செல்வராஜ் ரூ. 3000/-ம் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொன்டனர். 

தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment