ஈரோட்டில் மொபைல் போன் திருடிய 2 சிறுவர்கள் கைது : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 5 June 2024

ஈரோட்டில் மொபைல் போன் திருடிய 2 சிறுவர்கள் கைது :



 ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகேயுள்ள சுப்ரீம் மொபைல்ஸ் கடந்த மாதம் , 27 ம் தேதி இரவு 58 விலை உயர்ந்த மொபைல் போன்கள் திருட்டு போனது . இவற்றின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் . இது தொடர்பாக விசா ரித்த ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் , இரண்டு சிறுவர்களை கைது செய்தனர் .


 இதுபற்றி போலீசார் கூறியதாவது : கள்ளக்குறிச்சி , வெள்ளிமலையை சேர்ந்த , 17 வயது சிறுவன் , திருவண்ணாமலை , மேல் செலம்பாடியை சேர்ந்த 18 வயது சிறுவன் என இருவரும் சேர்ந்து கைவரிசை காட்டியுள்ளனர் . இவர்களிடம் இருந்து ஆறு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . மொபைல் போன்களை எடுத்து செல்லும் போது வனத்துறையினர் துரத்தியதாகவும் , வனப்பகுதியில் போட்டு விட்டதாகவும் சிறுவர்கள் தெரிவித்தனர் . திருட்டில் தொடர்புடையதாக மற்றொரு நபரை சந்தேகிக்கிறோம் . விரைவில் அவரை பிடித்து விசாரிக்க உள்ளோம் . இவ்வாறு போலீசார் கூறினர் . பிடிபட்ட சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி , கோவை சிறுவர் ஆபடுத்தி , கோத்தில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர் .



தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment