பாலம் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 3 June 2024

பாலம் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை :



 வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள பர்கூர் ரோட்டில் நடந்து வரும் உயர்மட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள சங்காரப்பாளையம் அடுத்த சுமைதாங்கி என்ற இடத்தில் , கெட்டிசமுத்திரம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் சாலை துண்டிக்கப்படும் நிலை இருந்து வந்தது .


நெடுஞ்சாலைத்துறை இந்நிலையில் , சார்பில் உட்கட்டமைப்பு சாலை பணியின் கீழ் , இரண்டு கோடி ரூபாயில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி , கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நடந்து வருகிறது . அந்தியூரிலிருந்து மூலக்கடை செல்வதற்கும் , மூலக்கடையிலிருந்து அந்தியூர் செல்வதற்கும் , சுமைதாங்கியிலிருந்து குருநாதபுரம் வழியாக , நான்கு சக்கர மற்றும் டூ விலரில் பயணிப்பவர்கள் சென்று வருகின்றனர் .


மேலும் , அவ்வழியில் கனரக மற்றும் பல்வேறு வாகனங்கள் சென்று வருவதால் , குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது . இந்நிலையில் , உயர்மட்ட பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . 


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  வாசுதேவன், பவானி.

No comments:

Post a Comment