பேக்கிங் ஊழியரின் வீட்டில் 7.50 லட்சம் ரூபாய் கொள்ளை : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 3 June 2024

பேக்கிங் ஊழியரின் வீட்டில் 7.50 லட்சம் ரூபாய் கொள்ளை :


 ஈரோட்டில் தனியார் பேக்கிங் மெட்டீரியல் ஊழியரின் வீட்டில் இருந்து 7.50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 


ஈரோடு மாநகருக்கு உட்பட்ட சத்தி ரோட்டில் ரமேஷ்குமார் மற்றும் மிஸ்ராராம் ஆகியோருக்கு சொந்தமான பேக்கிங் மெட்டீரியல் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது . இதன் ஊழியராக தேவாராம் என்பவர் பணியாற்றி வரும் நிலையில் , கடையில் வசூல் செய்யப்பட்ட சுமார் 7 . 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை தனது வீட்டில் வைத்துவிட்டு வெளியூர் சென்றுள்ளார் .


 இந்நிலையில் இன்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது , முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் . பின்னர் உள்ளே சென்று பார்த்த போது , அங்கு பீரோவில் இருந்த 7. 50 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது . இதுகுறித்து நகர காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் , கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment