செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆலோசனைக் கூட்டம் பவானி : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 2 June 2024

செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆலோசனைக் கூட்டம் பவானி :



 செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருப்பணி , கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது . கோவிலில் நடந்த கூட்டத்தில் , திருப்பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரபாத் மகேந்திரன் தலைமை தாங்கினார் . பவானி எம்எல்ஏ கருப்பணன் , திமுக நகரச் செயலாளர் நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இதில் , கோவில் திருப்பணிக்கு முன்வந்து செயலாற்ற விருப்பம் தெரித்தவர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளித்து , பணியை விரைவில் முடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது 

.

மேலும் , வரும் டிசம்பர் 8 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது . தொடர்ந்து , 48 நாட்கள் மண்டல பூஜை செய்வதற்கும் , அடுத்து மாசி மாதம் தேர் திருவிழா நடத்தவும் வாய்ப்புகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  வாசுதேவன்,  பவானி.

No comments:

Post a Comment