கொங்கு கல்லூரியில் தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு தொடக்கம் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 17 June 2024

கொங்கு கல்லூரியில் தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு தொடக்கம் :


ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் , தணிக்கையாளர் பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி நடந்தது . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எச் . வாசுதேவன் தலைமை தாங்கினார் . ஜே . கே . ஷா வகுப்புகள் மற்றும் வெராண்டா லேர்னிங் சொல்யுஷன்ஸ் நிறுவ னத்தின் துணைத்தலைவர் ஜி . சிவக்குமார் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார் . ' பேராசிரியர் விஷ்ணு வர்தன் தொழில்முறை பாடத்தேர்வுகளில் வெற்றி கொள்ள கையாளப்படும் நேர்த்தியான முறைகள் குறித்தும் , தலைமை கல்வியாளர் கேதன் ஷா தணிக்கையாளர்கள் மற்றும் கணக்காளர்கள் அரங்கில் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்காக தற்போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முயற்சிகள் மற்றும் ஒழுக்கம் குறித்தும் பேசினர் . 


இதில் நிறுமச்செயலியல் மற்றும் தொழில்சார் கணக்கு பதிவியல் துறைத்தலைவர் கே . ஏ . அழகு அப்பன் , வணிகவியல் , வங்கி மற்றும் காப்பீட்டுத்துறை தலைவர் கே . எம் . குமரகுரு , வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறைத்த லைவர் பி . கே . மங்கையர்க்கரசி , இணை பேராசிரியர் எம் . சதீஷ் மற்றும் பேராசிரியர்கள் , மாணவ- மாணவிகள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment