வரைவு வழிகாட்டு பதிவேடு தயாரிக்க கருத்து தெரிவிக்க அழைப்பு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 16 June 2024

வரைவு வழிகாட்டு பதிவேடு தயாரிக்க கருத்து தெரிவிக்க அழைப்பு :


வரைவு வழிகாட்டு பதிவேடு தயாரிக்க கருத்து , ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு ஈரோடு மாவட்டத்தில் , வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழி காட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு , முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன . சந்தை மதிப்பு வழிகாட்ட மதிப்பை சீரமைத்தல் தொடர்பாக , சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல் , வெளியிடுதல் , திருத்தி அமைத்தலுக்காக பொதுமக்களின் கருத்து , ஆட்சேபனைகள் கோரப் படுகிறது . ஈரோடு மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரி யாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு , மக்கள் பார்வைக் காக தாசில்தார் அலுவலகம் , சார் பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன www . tnreginet . gov . in என்ற இணைய தள முகவ ரியில் அறியலாம் . 


இதன் மீது ஆட் சேபனை , கருத்துக்கள் இருந்தால் , அடுத்த , 15 நாட்களுக்குள் கலெக் டரின் தலைமையிலான மதிப்பீட்டு துணை குழுவிடம் நேரில் அல்லது தபால் மூலம் வழங்கலாம் . இவற்றை , ' மதிப்பீட்டு துணைக் குழு , கலெக்டர் ஈரோடு - அலுவலகம் , 638011 ' என்ற முகவ ரியில் தெரிவிக்கலாம் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு. 

No comments:

Post a Comment