அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை இளைஞர் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 June 2024

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை இளைஞர் :



ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்ற நேற்று சென்றது . இதனை ஓட்டுனர் துரைசாமி மற்றும் நடத்துனர் அருண்குமார் ஆகியோர் இயக்கியுள்ளனர் . 



இந்த பேருந்தில் மதுபோதையில் ஏறிய இளைஞர் ஒருவர் பேருந்தின் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியவாறு சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் . இதனை அடுத்து சக பயணிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் மதுபோதையில் இருந்த இளைஞரை வேப்பம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டுள்ளனர் . 

இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த இளைஞர் அங்கு இருந்த கல்லால் அரசு பேருந்து பின்பக்க கண்ணாடி உடைத்துள்ளார் . இதுகுறித்து ஓட்டுநர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்து அனுப்பி வைத்தனர் . தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்தது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பதும் , அவர் பல்லடத்தில் கூலி வேலை செய்வதற்காக சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது . மதுபோதையில் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட ஆத்திரத்தில் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்ததை ஒப்புக்கொண்டார் . இதனையடுத்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment