தேசிய நீச்சல் போட்டிக்கு ஈரோடு மாணவி தேர்வு - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 28 June 2024

தேசிய நீச்சல் போட்டிக்கு ஈரோடு மாணவி தேர்வு




 தேசிய நீச்சல் போட்டிக்கு , ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவி , தேர்வு செய்யப்பட்டுள்ளார் . ஈரோடு , ரங்கம்பாளையம் , தன்னாட்சி மற்றும் சுயநிதி உதவி கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.ஏ. , ( டிபன்ஸ் பிரிவு ) படிக்கும் மாணவி பி.ஜி.தங்கம் ரூபிணி . நீச்சல் வீராங்கனையான இவர் , விருதுநகரில் நடந்த நீச்சல் போட்டியில் , சாம்பியன் பட்டம் வென்றார் . அதாவது , 800 மீட்டர் , 400 மீட்டர் , 200 மீட்டர் பை பின்ஸ் பிரிவுகள் மற்றும் 200 மீட்டர் சர்பேஸ் பிரிவு என , நான்கு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார் . இதையடுத்து மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடக்கும் , தேசிய அளவிலான மகளிர் சீனியர் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் . வரும் ஆக . , 18 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது . தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு , தமிழக அளவில் தேர்வான , 20 பேரில் இவரும் ஒருவர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment