மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 6 June 2024

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் :




 ஈரோட்டில் முறையாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பழைய பூந்துறை ரோடு ஓடை பள்ளத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன . இந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீரானது வினியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை . 


இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் இடம் பல முறை புகார் அளித்து உள்ளனர் . புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த் 50 க்கும் மேற்பட்டோர் ஈரோடு காந்திஜி சாலையில் மறியலில் ஈடுபட்டனர் . இதன் காரணமாக ஈரோடு காந்திஜி சாலையில் போக்குவரத்து பாதிப்புஏற்பட்டது . சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து களைந்து சென்றனர் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment