ஊரகவளர்ச்சித் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

ஊரகவளர்ச்சித் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை



ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 4 ஆவது மாடியில் ஊரக வளர்ச்சிதுறை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது . இந்த அலுவலகத்தில் பொறியாளர் பிரிவில் உதவி செயற்பொறியாளராக மோகன்பாபு என்பவர் பணியாற்றி வருகின்றார் . ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் சாலைப்பணிகள் , கட்டுமான பணிகள் தொடர்பான திட்டமிடல் , மற்றும் கட்டுமான பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவது உதவி செயற்பொறியாளரின் முக்கிய பணியாகும் . 


இதே போல கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு தகுதி நிர்ணய அங்கீகாரம் வழங்குவதும் இவரது பணியாகும் . இந்நிலையில் , உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்தாரர்களிடமிருந்து டெண்டர்கள் விடப்பட்ட பணிகளுக்கான கமிஷன் தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராஜேஸ் தலைமையில் போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து நேற்று முன்தினம் சோதனை நடத்தினர் . இதில் மோகன்பாபுவிடமிருந்து ரூ . 58 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ . 10 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது . இதையடுத்து உதவி செயற்பொறியாளர் மோகன்பாபு மீது போலீசார் பதிவு செய்தனர் . லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கி உள்ள மோகன்பாபுவின் சொந்த ஊர் கோவை ஆகும் .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment