ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் , ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகம் முன்பு நடைபெற்றது . இதில் , தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூ .1,000 - ல் இருந்து ரூபாய் 5,000 ஆக உயர்த்த வேண்டும் . தொழிலாளர்களின் குடும்பத்தினரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் . பஞ்சபடியுடன் கூடிய ஓய்வூதியம் , தொழிலாளர்களின் ஊதிய உச்சவரம்பை ரூபாய் 30 ஆயிரம் உயர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது .ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை பொறுப்பாளர் அந்தியூர் துரைசாமி தலைமை தாங்கினார் . அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் டி . முருகேசன் முன்னிலை வகித்தார் நடைபெற்றது . தொடர்ந்து கோரிக்கை மனு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மாவட்ட அலுவலரிடம் அளிக்கப்பட்டது . இதில் பாரதிய மஸ்தூர் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளர் ரமேஷ் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார் . கூட்டத்தில் மாவட்டத் துணைப் பொறுப்பாளர்கள் கோபிசெட்டிபாளையம் தண்டபாணி , செல்வம் கொடுமுடி பொறுப்பாளர் கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் மாவட்ட பொருளாளர் டி . சந்தோஷ் குமார் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment