உழவர் சந்தைகளுக்கு வரத்தான 76.06 டன் காய்கறிகள் ரூ . 26. 59 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது .
ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு வரத்தான 76. 06 டன் காய்கறிகள் ரூ . 26.59 லட்சத்திற்கு விற்பனையானது .
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர் , பெரியார் நகர் , பெருந்துறை , கோபி , சததியமங்கலம் , தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது . இந்நிலையில் , புரட்டாசி மாதத்தையொட்டி காய்கறிகளின் நுகர்வு அதிகமாக இருப்பதால் , விடுமுறை தினமான நேற்று ( செப் .22 ) மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர் . அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதலே காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது . இதில் , ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 32 . 25 டன் காய்கறிகள் ரூ . 11 லட்சத்து 41 ஆயிரத்து 179 க்கு விற்பனையானது . இதேபோல் , மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளுக்கும் மொத்தம் வரத்தான 76.06 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ . 26 லட்சத்து 59 ஆயிரத்து 732 க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment