தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது . அதன்படி , ஈரோடு மாவட்ட மக்களுக்கு பொது விநியோக திட்டத்தில் விநியோகிப்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தெலுங்கானா மாநிலம் சனத் நகர் பகுதியில் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது . இதில் , முதற்கட்டமாக 2 , 600 டன் புழுங்கல் அரிசி தெலுங்கானாவில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது . இந்த ரயில் நேற்று ( செப் .22 ) ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது . அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி , ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர் . இந்த அரிசி மூட்டைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு , பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment