கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த சாரைப்பாம்புகள் சிக்கின - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 September 2024

கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த சாரைப்பாம்புகள் சிக்கின



ஈரோடு சிஎன்சி கல்லூரி வளாகப் பகுதிகளில் சுற்றி திரிந்த 8 அடி நீளம்கொண்ட மஞ்சள் சாரை பாம்பு , 9 அடி நீள கருப்பு சாரை பாம்பு ஆகியவை பிடிபட்டன . மேலும் திண்டல் வித்யா நகர் பகுதியில் உள்ள மகேஷ் குமார் என்பவரின் வீட்டில் புகுந்த 3 அடி நீள மஞ்ச சாரைப்பாம்பு பிடிபட்டது . மேலும் எஸ்பி அலுவலக வளாக பகுதிகளிலும் பாம்புகள் இருப்பதாக வந்த தகவலையடுத்து பாம்பு பிடிக்கும் நிபுணர் பாம்பு யுவராஜ் அந்தப் பாம்புகளை பிடித்தார் . இது பற்றி அவர் கூறியதாவது தற்போது வெயில் காலம் அதிகரித்து வருகிறது .


 இந்த காலகட்டங்களில் பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் காலமாக கருதப்படுகிறது . இதனால் பொதுமக்கள் மாட்டுத் தொழுகை , செடி கொடிகள் உள்ள பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்றார் . மேலும் பிடிப்பட்ட பாம்புகளை சூளை ரோஜா நகர் பகுதியில் உள்ள வனசரக அலுவலகத்தில் பாம்பு யுவராஜ் ஒப்படைத்தார். 


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment