ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை .. உஷார் மக்களே : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 September 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை .. உஷார் மக்களே :


ஈரோடு மாவட்டத்தில் நாளை ( செப் . 23 ) திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது . ஈரோடு மாவட்டத்தில் தளவாய்பேட்டை மற்றும் சென்னம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை ( செப்டம்பர் 23 ) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது . இதனால் , நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என பவானி கோட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் . பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் : - சுக்காநாயக்கனூர் , சின்னாநாயக்கனூர் , காட்டூர் , கூத்தாண்டிகொட்டாய் , காக்காச்சிகரடு , ஆப்பக்கூடல் , ஆ . புதுப்பாளையம் , கூத்தம்பூண்டி , ஒரிச்சேரி , செட்டிக்குட்டை , எட்டிக்குட்டை , பெரியமேட்டூர் , சின்னமேட்டூர் , நல்லாநாயக்கனூர் , கள்ளியூர் , மல்லியூர் , நாச்சிமுத்துபுரம் , வேலாமரத்துார் , கரட்டுப்பாளையம் , காடையம்பட்டி , சேர்வராயன்பாளையம் , செங்காடு , கே . ஆர் . பாளையம் , எலவமலை , செங்கலாபாறை , அய்யம்பாளையம் , மூலப்பாளையம் , லட்சுமி நகர் , சின்னபுலியூர் , பெரியார் நகர் , மணக்காட்டூர் , தளவாய்பேட்டை , ஒரிச்சேரிப்புதூர் , வைரமங்கலம் , கவுண்டன்புதுார் , குட்டிபாளையம் , வெங்கமேடு , சலங்கபாளையம் , சிறைமீட்டான்பாளையம் , ஜம்பை , தளவாய்பேட்டை , பெரியமோளபாளையம் , சின்னமோளபாளையம் , திப்பிசெட்டிபாளையம் , சின்னியம்பாளையம் , பருவாச்சி , துருசாம்பாளையம் , இரட்டைகரடு.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment