ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களிலுள்ள 90 பழைய தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிக்கான வேலை உத்தரவு சான்றுகள் வழங்கப்பட்டது . வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் ரத்தினம்மா காளநாயக்கர் , கவுன்சிலர்கள் மாதேஷ் , முஜிபுல்லா , மாதேவம்மா , வட்டார வளர்ச்சி அலுவலர் குகானந்தன் , வார்டு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேலை உத்தரவு சான்றிதழ்களை வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment