கோபி அருகே கீழ்பவானி கால்வாயில் சட்டத்துக்கு புறம்பான வகையில் தண்ணீர் திருடப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததோடு , எச்சரிக்கை விடுத்துள்ளனர் . ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான திட்ட கால்வாயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது . இந்நிலையில் , கால்வாயில் திடீரென தண்ணீர் குறைவது கண்டறியப்பட்டது . இதனையடுத்து , உயர் அலுவலர்களின் அறிவுரையின்படி , இரவு நேர ஆய்வு பணிகளை உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார் ( கவுந்தப்பாடி ) , தினேஷ் குமார் ( கோபிசெட்டிபாளையம் ) ஆகியோர் களப்பணியாளர்களுடன் மேற்கொண்டனர் . அதன்படி , நேற்று ( 21 ம் தேதி ) இரவு 10 மணி முதல் இன்று ( 22 ம் தேதி ) மதியம் 1. 30 மணி வரை கால்வாயில் ஆய்வு மேற்கொண்டனர் .
இந்த ஆய்வின்போது , கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளாங்கோவில் கிராமம் அருகில் மழை நீர் வடிகால் குகை வழி பாதையில் சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகள் கால்வாயில் உள்ள தண்ணீரை பிவிசி குழாய்கள் மூலம் உறிஞ்சி எடுத்துச் செல்வது கண்டறிந்தனர் . அதனைத் தொடர்ந்து , பிவிசி குழாய்கள் முழுவதும் அகற்றி , அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர் . மேலும் , இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால் , சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment