மலிவு விலை ஜவுளி ; கடை முன் குவிந்த வாலிபர்கள் : - தமிழக குரல் - ஈரோடு

Post Top Ad

Post Top Ad

tamilaga%20kural

Tuesday, 24 September 2024

மலிவு விலை ஜவுளி ; கடை முன் குவிந்த வாலிபர்கள் :

IMG-20240924-WA0018

ஈரோடு ஜவுளி கடை முன் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டு , போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர் . ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காந்திஜி சாலையில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் சலுகை விலையில் இன்று ( செப் .23 ) சட்டை , பேண்ட் விற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது . இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பகிரப்பட்டு இருந்தது . இதனைத் தொடர்ந்து இன்று அந்த அறிவிப்பின்படி டி ஷர்ட் 50 ரூபாய்க்கும் , ஷர்ட் 100 ரூபாய்க்கும் பேன்ட் 250 ரூபாய்க்கும் , லேடிஸ் டாப்ஸ் 120 ரூபாய்க்கும் சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து இன்று காலை இந்த ஜவுளிக்கடையில் விற்பனை நடைபெற்றது . சலுகை விலையில் விற்கப்படுவதால் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அந்த ஜவுளி கடை முன் குவிந்தனர் . மேலும் ஒரே நேரத்தில் அனைவரும் கடைக்குள் போட்டி போட்டுக் கொண்டு நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது . கடை நிர்வாகத்தினர் திணறினர் . மேலும் அந்தப் பகுதி ஈரோடு காந்திஜி ரோடு பகுதி என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment