ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியை தேச விரோதி என விமர்சனம் செய்த பாஜக நிர்வாகி எச் . ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமையில் நடந்தது . இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவி முன்னிலையில் , மண்டல தலைவர் ஜாபர் சாதிக் , சிறுபான்மை பிரிவு பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எச் . ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment